sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

/

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

3


ADDED : மார் 30, 2025 06:15 PM

Google News

ADDED : மார் 30, 2025 06:15 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கட்லாங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் எனக்கூறியுள்ளது. மேலும், இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us