sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

/

பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!

6


UPDATED : மே 10, 2025 09:21 PM

ADDED : மே 10, 2025 07:12 PM

Google News

UPDATED : மே 10, 2025 09:21 PM ADDED : மே 10, 2025 07:12 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபூல்: இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'எங்கள் மீது குறிவைத்து இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு' என்று ஆப்கானிஸ்தான் மறுத்தது.

இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போர், இன்று 10ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இன்று அதிகாலை பேட்டி அளித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், 'இந்திய ஏவுகணை, ஆப்கானிஸ்தானை தாக்கியதாக' குற்றம் சாட்டியிருந்தார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை ஆப்கன் ராணுவ செய்தி தொடர்பாளர் இனயத்துல்லா கவாரிஸ்மி, மறுத்தார்.

இது குறித்து இனயத்துல்லா கவாரிஸ்மி கூறியதாவது: எங்கள் மீது தாக்குதல் குறித்து பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மை, எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், 'இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல முறை ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய நாடு எது என்பதை ஆப்கன் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்றார்.

போர் நிறுத்தம்

இவ்வாறு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தரப்பினர் கூறிய நிலையில், இன்று மாலை 5 மணியுடன் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை அமல் செய்வதாக அறிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us