sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

/

வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

வங்கதேசம் சென்றார் ஐ.எஸ்.ஐ., தலைவர்: இந்தியாவுக்கு எதிராக சதி ஆலோசனை!

17


ADDED : ஜன 23, 2025 09:54 AM

Google News

ADDED : ஜன 23, 2025 09:54 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் அசிம் மாலிக் வங்கதேசம் சென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான சதி ஆலோசனைகளில் இரு நாட்டு உளவு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தவரை, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள், சதித்திட்டங்களை தடுத்து வந்தார். அதே நேரத்தில், சர்வதேச விவகாரங்கள், சார்க், எல்லை தாண்டிய தீவிரவாதம் போன்ற பலவற்றில், இந்தியாவின் நிலைப்பாட்டையே ஷேக் ஹசீனாவும் பின்பற்றி வந்தார்.

அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் இந்திய விரோத மனநிலை கொண்ட அமைப்பினர் இடைக்கால அரசை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் புதிய உத்வேகம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரின் முதல் பயணமாக, ஐ.எஸ்.ஐ., தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் டாக்காவிற்கு வருகை தந்துள்ளார். இது இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் புதிய பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

துபாய் வழியாக டாக்கா வந்த அசிம் மாலிக்கை, வங்கதேச ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைசூர் ரஹ் வரவேற்றார்.

வங்கதேசத்தின் பல்வேறு ராணுவ, உளவு அதிகாரிகள், பேகம் கலிதா ஜியாவின் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஐ.எஸ்.ஐ., தலைவரின் வங்கதேச பயணம், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய நாசவேலைகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். சமீபத்தில், வங்கதேச ராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் இஸ்லாமாபாத் சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us