sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்

/

பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்

பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்

பாக்., ஜவுளி ஏற்றுமதி உச்சம் ரூ.14,200 கோடிக்கு வர்த்தகம்


ADDED : நவ 03, 2025 01:48 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி: பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை, 8.5 சதவீதம் பங்களிக்கிறது. ஜவுளித் துறை என்பது அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து அதிகளவு ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ஜவுளி ஏற்றுமதியில், 14,200 ரூபாயை எட்டி உச்சம் தொட்டுள்ளது.

அதிலும் பின்னலாடை ஏற்றுமதி மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு, 4,300 கோடி ரூபாயை எட்டியதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் ஜவுளித் துறை மட்டும் 60 சதவீதத்தைக் கொண்டிருந்ததாகவும் அந்த வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அண்டை நாடுகள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி, மதிப்பு கூட்டப்பட்ட வகைகளுக்கான வலுவான தேவை, வலுவான வர்த்தக தொடர்பு போன்ற காரணங்களால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக பாக்., ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us