ஜப்பானில் இருந்து சீனா திரும்பும் பாண்டா கரடிகள்
ஜப்பானில் இருந்து சீனா திரும்பும் பாண்டா கரடிகள்
ADDED : ஜன 26, 2026 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பானில் உள்ள கடைசி இரு பாண்டா கரடிகளும் நாளை சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கிழக்காசிய நாடான ஜப்பானில் பாண்டா கரடிகள் இல்லாத நிலையில், 1972ல் நம் அண்டை நாடான சீனா முதன் முதலாக அவற்றை வழங்கியது. மேலும், இந்த பாண்டாக்கள் மூலம் இனப்பெருக்கம் நடந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு பின் சீனாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
கடைசியாக சீனா அனுப்பி வைத்த இரு பாண்டா கரடிகள், டோக்கியோ யுயெனோ உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பாண்டா கரடிகளை திருப்பி அனுப்ப சீனா உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை இவை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

