sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!

/

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு; எப்-16 போர் விமானத்தை காணவில்லை என்கிறது உக்ரைன்!

1


ADDED : ஜூன் 29, 2025 03:30 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 03:30 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது உக்ரைன் விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எப்-16 போர் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும் கீவ் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை துவங்கினார். ஆனால் அவரது முயற்சி கை கொடுக்கவில்லை. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்கள் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் ஆறு பேர் காயம் அடைந்தனர்.

ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது உக்ரைன் விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், F-16 போர் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும் கீவ் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

ரஷ்யா ஒரே இரவில் 477 ட்ரோன்கள் மற்றும் பல்வேறு வகையான 60 ஏவுகணைகளை உக்ரைனுக்குள் ஏவியது. உக்ரைன் படைகள் 211 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை அழித்தது.

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். ஒரே இரவில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us