sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

/

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

8


UPDATED : ஏப் 22, 2025 05:11 PM

ADDED : ஏப் 22, 2025 04:50 PM

Google News

UPDATED : ஏப் 22, 2025 05:11 PM ADDED : ஏப் 22, 2025 04:50 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெட்டா: பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Image 1408934சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியா கிளம்பி சென்றார். இந்த பயணத்தின் போது, அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவை பலப்படுத்த பிரதமரின் இந்த பயணம் உதவும். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ஹஜ் கோட்டா, பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.Image 1408935

இதன்படி ஜெட்டா நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.Image 1408936

ஜெட்டா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் வந்ததும் அவரை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு விமானப்படை விமானங்கள் உடன் வந்தன. சவுதி அரேபியாவிற்கு 3வது முறையாக செல்லும் பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகருக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.Image 1408937

சவுதி வந்ததும், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வந்தடைந்தேன். இந்த பயணமானது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் நட்பை பலப்படுத்த உதவும். இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us