sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

/

காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

காசா துயரத்தால் வேதனை: பாலஸ்தீன அதிபரிடம் மோடி உருக்கம்

14


ADDED : செப் 23, 2024 08:58 AM

Google News

ADDED : செப் 23, 2024 08:58 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு, இரு நாடுகள் தீர்வு காண இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அதே நேரத்தில், காசாவின் மோசமான நிலைமை குறித்து இந்தியா மீண்டும் மீண்டும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, 'பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும். காசாவில் நடக்கும் துயர நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. காசா- இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்' என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நட்பை வலுப்படுத்தணும்

இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுடன் நீண்ட கால நட்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us