sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கைக்கு துணை நிற்போம்; அதிபர் அநுராவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

/

இலங்கைக்கு துணை நிற்போம்; அதிபர் அநுராவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

இலங்கைக்கு துணை நிற்போம்; அதிபர் அநுராவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

இலங்கைக்கு துணை நிற்போம்; அதிபர் அநுராவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


ADDED : டிச 01, 2025 10:09 PM

Google News

ADDED : டிச 01, 2025 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 370 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்களையும், மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும், 'ஆப்பரேஷன் சாகர் பந்து'வின் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத் தயார் என்று அவர் உறுதியளித்தார்.

அப்போது, நிவாரணப் பொருட்களையும், மீட்பு படையினரையும் அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு, இலங்கை மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே கூறினார்.






      Dinamalar
      Follow us