ADDED : டிச 18, 2024 07:19 PM

புதுடில்லி: இரு நாள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி குவைத் செல்கிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரு நாள் பயணமாக வரும் 21- 22 ம் தேதிகளில் அரசுமுறை பயணாக குவைத் செல்கிறார்.
அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவு அமைச்சர் மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார். பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இந்தியா- -குவைத் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் செல்வது இதுவே முதன் முறையாகும்.