sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை

/

அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை

அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை

அதிபர் பெயரை பயன்படுத்தி இலங்கையில் கைதி விடுதலை


ADDED : ஜூன் 12, 2025 06:47 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு,: நம் அண்டை நாடான இலங்கையில் அநுர குமார திசநாயகே அதிபராக உள்ளார். இங்கு கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில், வெசாக் எனப்படும் புத்த ஜயந்தி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள சிறைகளில் இருந்து 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அதில், அநுராதபுரம் சிறையில் இருந்து 40 லட்சம் ரூபாய் பணமோசடி வழக்கில் தண்டனை பெற்ற நபரை சிறைத் துறையினர் விடுவித்தனர்.

அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகிய போது, அவர் பெயர் மன்னிப்பு பெற்ற கைதிகள் பட்டியலில் இல்லை என்பது தெரிந்தது.

இதையடுத்து அதிபரின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தியதற்காக சிறைத்துறை தலைவர் துஷாரா மற்றும் அநுராதபுரம் சிறை கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்னே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us