sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புடினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு ரஷ்யா - உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி?

/

புடினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு ரஷ்யா - உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி?

புடினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு ரஷ்யா - உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி?

புடினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு ரஷ்யா - உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி?

3


ADDED : பிப் 10, 2025 03:02 AM

Google News

ADDED : பிப் 10, 2025 03:02 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்,:''உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசியுள்ளேன். போரில் உயிர் பலி ஏற்படுவதை அவரும் விரும்பவில்லை,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து டிரம்ப் பேசினார். அப்போது, 'அந்த நேரத்தில் நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்க மாட்டேன்' என, அவர் கூறினார்.

போரை நிறுத்தும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசிய போது டிரம்ப் கூறியுள்ளார். இல்லாவிட்டால், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளதாவது: புடினுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். போரை முடிவுக்கு கொண்டு வரும்படி கூறினேன். போரில் உயிர் பலி ஏற்படுவதை, தான் விரும்பவில்லை என்று புடின் என்னிடம் கூறினார்.

போரில் லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். இதற்கு மேலும் உயிர் பலி ஏற்படுவதை புடின் தடுத்து நிறுத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரிட்டன் இளவரசர் நாடு கடத்தலா?


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்கெலை திருமணம் செய்தார். அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து, 2020ல் தன் மனைவியுடன், அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு இளவரசர் ஹாரி இடம்பெயர்ந்தார். ஏற்கனவே மேகன் மார்க்கெல், டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இளவரசர் ஹாரியின் குடியுரிமை தொடர்பாக சர்ச்சை எழுப்பி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப், ''அவரை நாடு கடத்த மாட்டேன்; அவரை தனிமையில் விடுகிறேன். பாவம், அவருக்கு ஏற்கனவே மனைவியால் பல பிரச்னைகள் உள்ளன. மார்க்கெல் பயங்கரமானவர்,'' என, குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us