sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

/

அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

9


UPDATED : பிப் 17, 2024 10:40 AM

ADDED : பிப் 17, 2024 12:45 AM

Google News

UPDATED : பிப் 17, 2024 10:40 AM ADDED : பிப் 17, 2024 12:45 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி மரணத்திற்கு அதிபர் புடினே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அதிபராக ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்த விளாடிமிர் புடின் உள்ளார். இங்கு, 'எதிர்கால ரஷ்யா' என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி,48 அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி விமர்சித்து வந்தார்.இதையடுத்து அலெக்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை ஆர்க்டிக் சிறையில் அடைத்தது..

நேற்று சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாவல்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியது: விளாடிமிர் புடினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நாவல்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வருகிறது. இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு ஜோபைடன் கூறினார்.






      Dinamalar
      Follow us