sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

/

நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

நியூயார்க்கில் ராமர் கோவில் தேர் பவனி; களைகட்டிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்

7


UPDATED : ஆக 20, 2024 12:55 PM

ADDED : ஆக 19, 2024 12:25 PM

Google News

UPDATED : ஆக 20, 2024 12:55 PM ADDED : ஆக 19, 2024 12:25 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: நியூயார்க்கில் அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்தி வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுதந்திர தின விழா கொண்டாடினர்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோவில் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார். இது ஹிந்துக்களின் அடையாளம் என்று உலகம் முழுவதும் பாராட்டுப் பெற்றுள்ளது.

அலங்கார ஊர்தி

இந்த நிலையில், நியூயார்க் நகரில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய சுதந்திர தின விழா பேரணி நேற்று நடைபெற்றது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்று, நகரை வலம் வந்தன.

ராமர் கோவில்


குறிப்பாக, 19 அடி நீளம், 9 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு கொண்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.

நடிகை

இந்த ராமர் கோவில் போன்ற வடிவமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டு, விமானம் மூலம் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகும். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, பன்கஜ் திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

மதப்பாடல்கள் ஒலிப்பரப்பட்டு, இசைக்கருவிகள் இசைக்க, மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us