ஆயுதம் ஏந்தவும் தயார்; டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கொலம்பியா அதிபர் பெட்ரோ பதிலடி
ஆயுதம் ஏந்தவும் தயார்; டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கொலம்பியா அதிபர் பெட்ரோ பதிலடி
ADDED : ஜன 05, 2026 10:27 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, 'ஆயுதங்களை ஏந்துவேன்' என்று கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட வெனிசுலாவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையை குறிப்பிட்டு கொலம்பியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் கொலம்பியா அதிபர் பெட்ரோ நோய்வாய்ப்பட்டவர். அவருக்கு கோகைன் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்வது பிடிக்கும். அவர் அதை நீண்ட காலம் செய்ய முடியாது எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொட மாட்டேன் என்று சபதம் செய்தேன், ஆனால் தாய்நாட்டிற்காக, நான் மீண்டும் ஆயுதம் ஏந்துவேன். டிரம்பின் சட்டவிரோத அச்சுறுத்தலின் உண்மையான நோக்கத்தை நான் புரிந்து கொண்ட பிறகு அவருக்கு பதில் அளிப்பேன்.
கொலம்பியா அரசியலமைப்பைப் படிக்குமாறு நான் அவரை வலியுறுத்துகிறேன். அமெரிக்காவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையிலான உறவுகளில் முறிவை அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் என்னை கைது செய்தால், எனது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனக்கு இனி தேவையில்லை. நான் சட்டவிரோதமானவன் அல்ல.
போதைப்பொருள் கடத்தல்காரனும் அல்ல. எனது ஒரே சொத்து எனது குடும்ப வீடு, அதை நான் இன்னும் எனது சம்பளத்தில் செலுத்துகிறேன். எனது வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளேன். எனது சம்பளத்தை விட அதிகமாக நான் செலவு செய்துள்ளேன் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. நான் பேராசை கொண்டவன் அல்ல. எனது மக்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பெட்ரோ கூறியுள்ளார்.

