sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

/

இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

8


ADDED : ஆக 16, 2025 06:37 PM

Google News

8

ADDED : ஆக 16, 2025 06:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்போவதில்லை எனவும், 2- 3 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அபராதமாக மற்றொரு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்து இருந்தது. ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனை நிறுத்தியதாக தெரியவில்லை.

இதன் பிறகும், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று (ஆக.,16) அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.

இதன் பிறகு அமெரிக்கா மீடியாவுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: அலாஸ்காவில் நடந்த சந்திப்பு நன்றாக இருந்தது. இதற்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுத் வரி விதிப்பது தொடர்பாக, உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இரண்டு அல்லது மூன்று வாரத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்கா விதித்த வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்வாங்குவதை நிறுத்திவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us