கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சென்னையில் சுட்டுப்பிடிப்பு
கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சென்னையில் சுட்டுப்பிடிப்பு
ADDED : நவ 22, 2025 08:25 AM

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ரவுடி மவுலி (25) கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட மற்றொரு ரவுடி விஜயகுமார் காலில் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மவுலி (25) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ரவுடி விஜயகுமாரை,23, போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் போலீஸ்காரர் தமிழரசனுக்கு இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விஜயகுமாரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். தற்போது சிகிச்சைக்காக ரவுடி விஜயகுமார், போலீஸ்காரர் தமிழரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த கொலை வழக்கில் மேலும் கவுதம், நிரஞ்சன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

