sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு

/

அமெரிக்காவின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு

அமெரிக்காவின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு

அமெரிக்காவின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு


ADDED : ஏப் 02, 2025 06:17 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ : போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். நிபந்தனையற்ற மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா - உக்ரைன் கூட்டாக முன்வைத்த யோசனையை ஏற்றுக் கொள்ள ரஷ்யா அதிபர் புடின் சமீபத்தில் மறுத்தார்.

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள ரஷ்யா ஒப்புக் கொண்டது. ஆனாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ரஷ்யா, மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அழுத்தம் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாவது:

அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் தீர்வுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அதன் தற்போதைய வடிவத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் அறிந்த வரை, இந்த மோதலின் மூலகாரணங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்த எங்கள் பிரதான கோரிக்கைக்கு அதில் இடம் அளிக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us