ADDED : ஜூலை 13, 2026 10:11 PM

டெஹ்ரான்: ஈரானுக்கு அவசர உதவியாக ரஷ்யா தன் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை அனுப்பியுள்ளது, சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளது.
இந்த சூழலில், ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவியை செய்துள்ளது.
ரஷ்ய அதிபர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அவசர காலத்தில் வானில் இருந்தபடியே போரை வழிநடத்த பயன்படுத்தும் 'டி.யு.-214பி.யு.,' என்ற வான்வழி கட்டளை மைய விமானம், ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கமான பயணியர் விமானம் போல் தோற்றமளித்தாலும், 'டி.யு. -214பி.யு.,' விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ரஷ்ய தொழில்நுட்பம், தரைவழி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும், செயற்கைக்கோள் மற்றும் அதிநவீன ரேடியோ அலைவரிசைகள் மூலம் பாதுகாப்பான முறையில் ராணுவக் கட்டுப்பாட்டை தொடர அனுமதிக்கும்.
ம ணிக்கு 850 கி.மீ., வேகத்தில், தொடர்ந்து 6,500 கி.மீ துாரம் வரை பயணிக்கும் திறன் கொண் டது.
