sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்

/

 ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்

 ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்

 ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்


ADDED : ஜன 02, 2026 12:23 AM

Google News

ADDED : ஜன 02, 2026 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கெர்சன் பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, உக்ரைன் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக நடத்திய தாக்குதலில், 24 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர், நான்காவது ஆண்டை நெருங்கியுள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்தும், தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது. ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் உக்ரைனிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கெர்சன் பகுதியில், உக்ரைன் படைகள் நேற்று முன்தினம் ட்ரோன் வாயிலாக தாக்குதலை நடத்தியது. கடற்கரை கிராமமான கோர்லி என்ற இடத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மூன்று ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us