உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படைகள் முன்னேற்றம்; அதிபர் புடின் உற்சாகம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படைகள் முன்னேற்றம்; அதிபர் புடின் உற்சாகம்
UPDATED : டிச 19, 2025 07:31 PM
ADDED : டிச 19, 2025 06:32 PM

மாஸ்கோ: எங்கள் படைகள் முன்னேறி வருகின்றன; எதிரிப்படை பின்வாங்குகிறது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
உக்ரைனில் நான்கு ஆண்டுகளை நெருங்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புடின் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் இன்னும் புதிய வெற்றிகளைக் காண்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எல்லை முழுவதும் எங்கள் படைகள் முன்னேறி வருகின்றன; எதிரிப்படைகள் பின்வாங்குகின்றனர். இந்த மோதலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும்.
ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் உக்ரைன் படைகள் விலக வேண்டும். சில இடங்களில் வேகமாகவும், மற்ற இடங்களில் மெதுவாகவும், ஆனால் எல்லா திசைகளிலும், எதிரிகள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.

