sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

/

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

3


ADDED : ஜூன் 03, 2025 07:52 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:52 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்த போர் தொடர்கிறது. ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

இந்த தாக்குதலில், 30 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

உக்ரைனில் டொனெட்ஸக் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் உக்ரைனுக்கு மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.






      Dinamalar
      Follow us