sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 யு.ஏ.இ., அனுப்பிய ஆயுத கப்பலை குண்டு வீசி அழித்தது சவுதி

/

 யு.ஏ.இ., அனுப்பிய ஆயுத கப்பலை குண்டு வீசி அழித்தது சவுதி

 யு.ஏ.இ., அனுப்பிய ஆயுத கப்பலை குண்டு வீசி அழித்தது சவுதி

 யு.ஏ.இ., அனுப்பிய ஆயுத கப்பலை குண்டு வீசி அழித்தது சவுதி


ADDED : டிச 31, 2025 04:54 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஏமனின் பிரிவினைவாத படைகளுக்கு ஆதரவாக அந்நாட்டின் முஹல்லா துறைமுகத்துக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பிய ஆயுத கப்பலை சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்தது.

மேற்காசிய நாடான ஏமனில் கடந்த 10 ஆண்டு களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இப்போரில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவினரும், அரசு படைகளும் மோதி வருகின்றன. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் அரசு படைகளுக்கு ஆதரவாக உள்ளன.

இந்நிலையில், அரசு படைகளுக்கு உள்ளேயே, 'தெற்கு இடைக்கால கவுன்சில்' என்ற பிரிவினை வாதக்குழு உருவெடுத்தது. இவர்கள் தெற்கு ஏமனை தனி நாடாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த குழுவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவளித்து வருகிறது.

தெற்கு இடைக்கால கவுன்சில் தலைமையிலான படைகளுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்பி வைத்தது.

அந்த கப்பல்கள் ஏமனின் முஹல்லா துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்தன.

இதையறிந்த சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்கள் நடத்தி, இரு ஆயுத கப்பல்களையும் அழித்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தாக்குதலை நடத்தியதாக சவுதி ராணுவம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, ஏமனின் அரசு படைகள் நேற்று அவசரநிலையை அறிவித்தன. எமிரேட்ஸ் உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, அங்குள்ள எமிரேட்ஸ் படைகளை 24 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளன.

சவுதி வெளியுறவு செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us