sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

/

கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை அறிவிப்பு

7


UPDATED : ஆக 31, 2024 10:52 AM

ADDED : ஆக 31, 2024 10:37 AM

Google News

UPDATED : ஆக 31, 2024 10:52 AM ADDED : ஆக 31, 2024 10:37 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி அரேபியரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்தவருக்கு சவுதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செரும்பா என்ற பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் அப்துல்ரகுமான் 63. இவர் மீதான நடவடிக்கை குறித்து சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்; அப்துல்காதர் அப்துல்ரகுமான் சவுதி பிரஜையை கொலை செய்த வழக்கில் ஷரியத் கோர்ட் விசாரித்து மரணத்தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்துல்காதர் சுப்ரீம் கோர்ட்டில் (ராயல் கோர்ட் ) அப்பீல் செய்தார். இது நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ரியாத் சிறையில் உள்ள அவர் போலீஸ் கஸ்டடியில் ஒப்படைக்கப்பட்டார். கொலை நடந்த இடத்தில் அப்துல்காதரின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்துல்காதரால் கொலை செய்யப்பட்ட நபர் யார் , பெயர் என்ற விவரம் உள்துறை வெளியிடவில்லை.

மற்றொரு கிரைம்: தம்பதியினர் கொலை


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அணூப்மோன் 37, ரம்யாமோல் 28 இருவரும் சவுதியில் அல்கோபார் தவுபா என்ற இடத்தில் அவரது வீட்டில் பிணமாக கிடந்தனர். கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் 5 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் வெளியே தெரிந்தது.

ஆண்டுதோறும் பலர்


2022 ல் 81 பேரும், 2023 ல் 170 பேரும், 2024 ல் 106 பேரும் மரணத்தண்டணை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us