மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
ADDED : நவ 10, 2025 10:20 AM

கோலாலம்பூர்: மியான்மரில் இருந்து மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில்100 பேர் மாயமாகினர். இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேஷியா நோக்கி சென்றது. மலேஷியாவின் பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது, அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மலேஷிய கடற்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கியது.
இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 100 பேர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக, மலேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை, வறுமை உள்ளிட்ட காரணங்களினால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

