sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

/

மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு

4


UPDATED : ஜூன் 01, 2025 04:42 PM

ADDED : ஜூன் 01, 2025 03:57 PM

Google News

UPDATED : ஜூன் 01, 2025 04:42 PM ADDED : ஜூன் 01, 2025 03:57 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாகா: மாணவர்கள் போராட்டத்தின் போது அதனை ஒடுக்குவதற்காக, பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.

வங்கதேசத்தில், கடந்த 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ள வங்கதேச இடைக்கால அரசு, நாடு கடத்தும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், இது குறித்து மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனிடையே ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவருக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தின் போது, அதனை ஒடுக்க வேண்டும் என்பதற்காக ஷேக் ஹசீனா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் என வங்கதேச அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் தஜூல் இஸ்லாம் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர், கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஹசீனா நேரடியாக உத்தரவிட்டார். இதனால், ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் எல்லாம் திட்டமிடப்பட்டவை. ஹசினா தான் அரசின் தலைவர் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு அவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக்கூறியதுடன் அது குறித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தகவல்பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us