sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

/

மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

1


ADDED : ஜூன் 26, 2025 08:08 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 08:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் நடந்த சாலை கொண்டாட்டத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் இரபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற உள்ளூர்வாசிகள் நடனமாடியும், மது அருந்தியும் கொண்டிருந்தனர்.

அப்போது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்போம். அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர், ''இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவானாஜுவாடோ, பல ஆண்டுகளாக மெக்சிகோவின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us