உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 23, 2024 10:26 AM

அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணம் ஜூலியட் நகரில் இன்று(ஜன.,23) இரு வீடுகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரணையில், ரோமியோ நான்சி என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. ரோமியோ நான்சியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது: நான் 25 வருடங்களாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறேன். இந்த சோகம் சம்பவம் மீண்டும் நடக்க கூடாது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கருத்தில் கொண்டு, குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
