sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; இந்திய வம்சாவளி தந்தை, மகள் பலி

/

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; இந்திய வம்சாவளி தந்தை, மகள் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; இந்திய வம்சாவளி தந்தை, மகள் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; இந்திய வம்சாவளி தந்தை, மகள் பலி


ADDED : மார் 24, 2025 02:30 AM

Google News

ADDED : மார் 24, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க் : அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிப் குமார் படேல், 56, ஆறு ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

வர்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் கவுன்டி என்ற நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், பிரதிப் குமார், அவரது மகள் ஊர்மி, 24, பணிபுரிந்து வந்தனர். கடந்த 20ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பிரதிப் குமார், ஊர்மி ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே பிரதிப் குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஊர்மி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஓனான்காக் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ரேஷியர் டெவோன் வார்டன், 44, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us