sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென் கொரியாவை 3வது நாளாக புரட்டி போடும் கனமழை; தத்தளிக்கும் 13 நகரங்கள்

/

தென் கொரியாவை 3வது நாளாக புரட்டி போடும் கனமழை; தத்தளிக்கும் 13 நகரங்கள்

தென் கொரியாவை 3வது நாளாக புரட்டி போடும் கனமழை; தத்தளிக்கும் 13 நகரங்கள்

தென் கொரியாவை 3வது நாளாக புரட்டி போடும் கனமழை; தத்தளிக்கும் 13 நகரங்கள்


ADDED : ஜூலை 18, 2025 09:44 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியோல்: தென்கொரியாவின் பெய்து வரும் பலத்த மழைக்கு பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5661 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. 3 நாட்களை கடந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

மழை மேலும் நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மழையின் பாதிப்பில் மக்கள் தவித்து வருகின்றனர். தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு நிலைமை மோசம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லீஜா மியுங், அனைத்து துறை அமைச்சகங்களையும், தயார் நிலையில் இருக்குமாறும், தேசிய பேரிடர் மையத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், 4 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 13 நகரங்களில் இருந்து 5661 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள 247 கல்வி நிலையங்களுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us