sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

/

குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

குரங்கு செய்த சேட்டை; இருளில் மூழ்கிய இலங்கை

10


ADDED : பிப் 10, 2025 03:51 AM

Google News

ADDED : பிப் 10, 2025 03:51 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கையில், மின் நிலையத்துக்குள் நுழைந்து குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது.

நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று காலை திடீரென மின் தடை ஏற்பட்டது. கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பானாந்துறை மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த மாறுபாடு பிரச்னையால் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின் வாரியம் அறிவித்தது.

சில நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். குடிநீர் சப்ளையும் இல்லாததால் குடிக்க நீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் குமர ஜெயக்கொடி கூறியதாவது: கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின் சப்ளை நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்னையால், நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும். மின் தடைக்கு பானாந்துறை தேசிய மின் சப்ளை நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம்.

பணியாளர்கள் தீவிர முயற்சியால் சில மணி நேரங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டது. தொடர்ந்து பிற இடங்களிலும் மின்சப்ளை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us