sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

/

கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

3


ADDED : ஜூலை 07, 2025 04:09 PM

Google News

3

ADDED : ஜூலை 07, 2025 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.

கடந்த ஜூன் 29ம் தேதி அன்று, இந்திய மீனவர்கள் 4 பேர் மீன் பிடிக்கச்சென்றனர். அப்போது மோசமான வானிலை காரணமாக, இந்திய மீனவர்கள் கடலில் சிக்கி, அனைத்து தொடர்பு இணைப்புகளையும் இழந்தனர்.

இதனை தொடர்ந்து மும்பை கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கை கடற்படைக்கு தெரிவித்த நிலையில், இலங்கை கடற்படையின் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு பணியால் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:

மீட்கப்பட்ட 4 மீனவர்களும் டிகோவிட்டா துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர், அங்கு அவர்களுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்தது.

கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இரண்டு வாரங்களில், 2வது முறையாக இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து மீனவர்கள் 4 பேரும் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்காக வத்தளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us