sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி

/

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி

 புயல் நிவாரண பணிகளுக்காக இலங்கைக்கு கிடைத்தது ரூ.252 கோடி


ADDED : ஜன 24, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து, 252 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த நவ., - டிசம்பரில் கோரத்தாண்டவமாடிய, டிட்வா புயல் பாதிப்பில், 640க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி, 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு, 700 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

அந்நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, நம் நாடு, 4,050 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், 47 நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைத்துள்ளன.

அதன் மொத்த மதிப்பு 252 கோடி ரூபாய். இந்த தொகை வெளிநாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், வெளிநாட்டு இலங்கை வாசிகள், தனிநபர்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. இதில் அமெரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.






      Dinamalar
      Follow us