sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

/

சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

சூடான டீ கொட்டியதற்கு ரூ.435 கோடி இழப்பீடு: ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி

6


ADDED : மார் 19, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 19, 2025 06:44 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலிபோர்னியா : 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனத்தின் டெலிவரி கவுன்டரில் வழங்கிய சூடான டீ கொட்டியதில், இடுப்பு பகுதியில் காயமடைந்தவருக்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் என்ற, உலகம் முழுவதும் பரவியுள்ள பிரபலமான காபி நிறுவனத்தில், மைக்கேல் கார்சியா என்ற டெலிவரி டிரைவர் டீ வாங்கினார். அந்த டீயை அவர் வாங்கிய போது, அங்கிருந்த ஊழியர் கன்டெய்னர் மூடியை சரியாக மூடாமல் கொடுத்தார்.

அதை அறியாமல் வாங்கிய கார்சியாவின் இடுப்பு பகுதியில் சூடான டீ கொட்டியது. இதில், அவரின் இடுப்பு பகுதியில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது.

அதற்கு இழப்பீடு கேட்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனம், 'சாதாரண காயத்திற்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடா...' என கூறி, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us