sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்

/

சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்

சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்

சீனாவில் கரையை கடந்தது புயல் 2,83,000 பேர் வெளியேற்றம்

1


ADDED : ஆக 01, 2025 03:34 PM

Google News

ADDED : ஆக 01, 2025 03:34 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாங்காய்: சீனாவின் பொருளாதார மையமான ஷாங்காயில், 'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக, கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தென் சீனக் கடல்பகுதியில் மையம் கொண்டிருந்த கோ-மே புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது.

கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அத்துடன் பலத்த மழையும் கொட்டியது. இதனால் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 83,000 பேர் வெளியேற்றப்பட்டனர். நகரம் முழுதும் 1,900க்கும் மேற்பட்ட தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

ஷாங்காயின் இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், 640 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us