ADDED : ஏப் 23, 2024 09:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: அமெரிக்காவில் கொலம்பியா பல்கலை., மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். காசா மீதான போர் தாக்குதலுக்கு அமெரிக்கா துணைபோவதாக அதிபர் ஜோபைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது.
பல்கலை.,யில் குவிந்துள்ள பாலீஸ்தீன ஆதரவாளர்கள் பலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்புகளை உடைத்து சிலர் முன்னேறி சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நேரத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகாகோவில் நடந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றதால் இப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

