sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

/

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்; சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை


ADDED : மே 08, 2025 01:21 PM

Google News

ADDED : மே 08, 2025 01:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஏப்.,22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திடீர் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், 'பயங்கரவாதத்தை இந்தியா எதிர்க்கும் விதம் குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-அல்ஜுபைர் உடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார்.

அதேபோல, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி நேற்றிரவு டில்லி வந்தார். இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.






      Dinamalar
      Follow us