sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'

/

‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'

‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'

‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'

10


ADDED : ஏப் 26, 2025 01:01 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:01 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'ஜம்மு - காஷ்மீரில் போராளிகள் தாக்குதல்' என செய்தி வெளியிட்டுள்ள, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அரசு, 'அது பயங்கரவாத தாக்குதல்' என, தெளிவுபடுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது, எப்போதுமே இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து செய்தி வெளியிடும் பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை, 'ஊடுருவல்' என்றே குறிப்பிடுகின்றன.

அதுவே, காஷ்மீர் விவகாரம் குறித்து செய்தி வெளியிடுகையில், 'பாக்., ஊடுருவல்' என்பதற்கு பதிலாக, 'காஷ்மீர் பிரச்னை' என்றே குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், 'காஷ்மீர் போராளிகளால், 24 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என, தலைப்பிட்டது.

இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தியை இணைத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். அதில் எந்த குழப்பமும், மாற்றமும் இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதம் என்று வரும்போது நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி நிற்கிறது' என, குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த தலைப்பில் உள்ள, 'போராளிகள்' என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதில், 'பயங்கரவாதம்' என குறிப்பிட்டதுடன், 'உங்கள் சார்பில் நாங்களே திருத்தம் செய்துவிட்டோம்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

தண்டிக்க வேண்டும்: அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டேமி புரூஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த கடுமையான நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இந்த கொடூர பயங்கரவாத செயலை கண்டிப்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெளிவுபடுத்தி உள்ளனர். ஜம்மு - காஷ்மீர் நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றம் குறித்து, இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.



வித்தியாசம் என்ன?

போராளிகள் என்ற வார்த்தை, ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூக மாற்றத்திற்காக ஆயுதம் ஏந்தி, ஒரு நாட்டுக்குள் அல்லது மாநிலத்திற்குள் போராடும் கிளர்ச்சியாளர்களை குறிக்கும்.அதுவே, பயங்கரவாதி என்பவர்கள் தேசத்துக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஒரு நாட்டுக்குள் ஊடுருவி, புவியியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுபவர்கள்.








      Dinamalar
      Follow us