sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி

/

பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி


ADDED : நவ 22, 2024 01:09 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெஷாவர்,

பாகிஸ்தானில் பயணியர் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், பெஷாவர் மற்றும் பராசினார் இடையேயான சாலையில், பயணியரை ஏற்றிச்சென்ற மூன்று வாகனங்கள் மீது, சாலையின் இருபுறமும் நின்றபடி, நேற்று, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில், வாகனங்களில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட, 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், தாக்குதல் நடந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர்.






      Dinamalar
      Follow us