sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டி.என்.ஏ.,வை கண்டுபிடித்தவர் காலமானார்

/

டி.என்.ஏ.,வை கண்டுபிடித்தவர் காலமானார்

டி.என்.ஏ.,வை கண்டுபிடித்தவர் காலமானார்

டி.என்.ஏ.,வை கண்டுபிடித்தவர் காலமானார்


ADDED : நவ 09, 2025 01:03 AM

Google News

ADDED : நவ 09, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்:டி.என்.ஏ.,வை கண்டுப்பிடித்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் டி வாட்சன், 97 வயதில் காலமானார்.

அமெரிக்க உயிரியலாளரான ஜேம்ஸ் டி வாட்சன், பிரிட்டன் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் இணைந்து, 1953ம் ஆண்டில் டி.என்.ஏ., எனப்படும் மரபணுவின் இரட்டைச் சுருள் அமைப்பை கண்டுப்பிடித்தனர்.

டி.என்.ஏ.,வை முதன்முதலில் கண்டறிந்தது சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்றாலும், அதன் கட்டமைப்பை உலகிற்கு காட்டியது ஜேம்ஸ் வாட்சன் குழு. இது உயிரியல் துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு வழி வகுத்தது.

இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும், 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதாக லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us