sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

/

ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா


ADDED : நவ 07, 2025 01:10 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என, போர் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தா ர்.

இதற்கிடையே, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் உடைய 'மினிட் மேன் -- 3' ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதம் இன்றி இந்த சோதனை நடந்ததாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் படைத்தளத்தில் இருந்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டது.

இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும், சோதனைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா எச்சரிக்கை!

அமெரிக்காவோ அல்லது அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளோ அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா தயங்காது என, அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா, ஒருபோதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை துவங்காது என்ற முந்தைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்த அவர், அணு ஆயுத சோதனையை மீண்டும் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த பரிந்துரைகளை தயாரிக்குமாறு உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us