sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

/

சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

சம்பளம் தர வழியில்லை; பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிகள்!

15


ADDED : நவ 05, 2024 03:51 PM

Google News

ADDED : நவ 05, 2024 03:51 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

இது குறித்து அந்த மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;

இங்கு 275 மனித வள மேம்பாடு தேசிய ஆணையம் பள்ளிகள், 541 ஆரம்ப பள்ளிகள், 2,200 பெண்கள் சமூக பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை.

இந்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொடுப்பது ரூ.21 ஆயிரம் தான். அதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை.

அரசிடம் இருந்து நிதி வராததால், ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றார்.

ஆசிரியர்கள் கூறுகையில், பல பள்ளிகளுக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. தேவையான நிதி, அரசிடமிருந்து பள்ளி நிர்வாகத்திற்கு வராததால், வாடகை செலுத்த இயலவில்லை.

முறையான ஊதியம் இல்லாததால் பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியம் அளிக்காவிட்டால் மேலும் பள்ளிகள் மூடப்படம் அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிப்புக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us