sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

/

உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

9


ADDED : ஜூன் 22, 2025 03:24 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:24 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: நீண்ட காலமாக உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரான் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல்-ஈரான் இடையே நாளுக்கு நாள் போர் அதிகரித்து வருகிறது. ஈரான் அணு ஆயதம் தயாரிப்பதாக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பது அமைதியான பயன்பாட்டிற்கு என்று வலியுறுத்துகிறது. 2015-ல் ஈரான் அணு ஒப்பந்தம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் 2018-ல் அமெரிக்கா விலகிய பிறகு, ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலை துவங்கியது. ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஈரான் செயலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:

உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரானிய ஆட்சி, நீண்ட காலமாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

ஈரான், அணு ஆயுதம் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஈரானின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலும், அமெரிக்காவும் தீர்க்கமாக செயல்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம்.

இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us