sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

/

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

7


ADDED : மார் 15, 2024 12:46 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:46 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: பொருளாதார காரணங்களுக்காக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவைச் சுற்றி உள்ள ஏழை நாடுகளான மெக்சிகோ, கியூபா, டொமினிக் குடியரசு மட்டு மின்றி, நம் நாட்டிலிருந்தும் பலர் ஏஜன்ட்களை நம்பி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் இருந்து, மூன்று இந்தியர்கள் மற்றும் டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒருவர் என, நான்கு பேர் சரக்கு ரயில் வாயிலாக சமீபத்தில் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இவர்களில் ஒருவர் பெண்.

அந்த ரயில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பப்பல்லோ நகரில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேரும் ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதை அங்கு ரோந்து பணியிலிருந்த எல்லை ரோந்து படையினர் பார்த்துவிட்டனர்.

அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அதில் இந்திய பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற மூவரையும் சிறைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us