தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ விமானம் விழுந்து மூன்று பேர் பலி

விமானம் விழுந்து மூன்று பேர் பலி

விமானம் விழுந்து மூன்று பேர் பலி


ADDED : ஜன 11, 2025 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நைரோபி: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடற்கரை நகரமான மலின்டியில் இருந்து பைலட் மற்றும் இரண்டு பேருடன், சிறிய விமானம் நைரோபி விமான நிலையத்திற்கு நேற்று புறப்பட்டது.

புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து விமானம் அங்கிருந்த கட்டடத்தில் மோதி நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அப்போது சாலையில் பைக்கில் சென்ற பெண் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கியதை உணர்ந்த பைலட் உள்ளிட்ட மூவரும், முன் கூட்டியே பாராசூட் வாயிலாக விமானத்தில் இருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us