இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; ஈரானுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்
ADDED : அக் 03, 2024 08:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை;
* இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தியுள்ள தாக்குதலுக்கு அதிபர் பைடன் மற்றும் ஜி 7 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
* ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கவும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் (ஜி7) தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
* இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

