sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

/

மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

மோடி குறித்த கனடா பத்திரிகை செய்தி கிரிமினல்களின் வேலை என ட்ரூடோ பல்டி

13


ADDED : நவ 25, 2024 06:27 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:27 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிந்தே நடந்ததாக, அந்நாட்டின் பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பிய போது, 'உளவுத்துறையில் உள்ள சில கிரிமினல்களின் வேலை அது' என கூறினார்.

வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.

இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், கனடாவின் முன்னணி பத்திரிகையான, 'தி குளோப் அண்ட் மெயில்' நிஜ்ஜார் கொலை குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்ததாக, செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், 'நிஜ்ஜார் கொலை சம்பவம் குறித்த திட்டம் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தெரியும்' என கூறப்பட்டு இருந்தது.

இந்த செய்திக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பத்திரிகை செய்தி ஊகமானது மற்றும் தவறானது என, கனடா தரப்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில், ஆதாரமின்றி கனடா பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ட்ரூடோ, “அரசின் மிகவும் ரகசியமான விஷயம் என்ற பெயரில், பத்திரிகைகளுக்கு கிரிமினல்கள் தரும் செய்திகள் தவறாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.

''இதில் ஏதேனும் சதி இருக்கலாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா மக்களை பாதுகாப்பது தான், கனடா தலைவராக என் முதன்மை பணி. அதை செய்து வருகிறேன்,” என்றார்.






      Dinamalar
      Follow us