sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

/

அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை

9


ADDED : பிப் 02, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 02, 2025 07:20 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா வான்வழி தாக்குதலை துவங்கி உள்ளது.

இது குறித்து, டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், மேலும் பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து, சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது கூறியதாவது: பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் சோமாலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவு இருக்கிறது.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையின் கீழ், சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடரும் தாக்குதல்களை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us