sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

/

மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

2


ADDED : நவ 05, 2025 07:45 AM

Google News

2

ADDED : நவ 05, 2025 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்கா-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறும்போது டிரம்ப், மோடி அடிக்கடி பேசுகிறார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்திருப்பதை நான் அறிவேன், அவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள். பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் நெருங்கிய உறவை கொண்டு உள்ளார். இரு நாடுகளின் வர்த்தகக் குழுக்களும் தொடர்ந்து தீவிரமான விவாதங்களை நடத்தி வருகிறது.

ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது டிரம்ப் மோடியுடன் பேசினார். அப்போது அங்கு அதிபர் டிரம்ப் உடன் மூத்த இந்திய-அமெரிக்க அதிகாரிகள் உடன் இருந்தனர். அதிபர் டிரம்ப் இந்தியா-அமெரிக்க உறவு குறித்து மிகவும் உறுதியாக உணர்கிறார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் நமது நாட்டை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்காக இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்த சூழலில் இருநாட்டு வர்த்தக குழுக்களும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிரம்ப், மோடி அடிக்கடி பேசுவார்கள் என மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us