sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் முயற்சி; வீராப்பு காட்டிய கொலம்பியா பணிந்தது!

/

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் முயற்சி; வீராப்பு காட்டிய கொலம்பியா பணிந்தது!

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் முயற்சி; வீராப்பு காட்டிய கொலம்பியா பணிந்தது!

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் முயற்சி; வீராப்பு காட்டிய கொலம்பியா பணிந்தது!

6


UPDATED : ஜன 27, 2025 02:24 PM

ADDED : ஜன 27, 2025 08:09 AM

Google News

UPDATED : ஜன 27, 2025 02:24 PM ADDED : ஜன 27, 2025 08:09 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்தை ஏற்க மறுத்த கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார்; பதிலுக்கு முதலில் வீராப்பு காட்டிய கொலம்பியா, பின்னர் பணிந்தது. இதையடுத்து தடை, வரி விதிப்பு உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்தார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.



இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதேபோல், அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியாவும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தினார்.

இந்த வரி விதிப்பு, ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்; கொலம்பியா நாட்டு அதிகாரிகளுக்கான விசா ரத்து செய்யப்படுகிறது; கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகளை தென் அமெரிக்கா நாடான கொலம்பியா முதலில் பொருட்படுத்தவில்லை. கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்கா இறக்குமதிகள் மீதான வரிகளை 25% உயர்த்துமாறு உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்காவில் எங்கள் நாட்டு பொருட்களுக்கு வரி விதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானும் அதையே செய்கிறேன், என்று கூறினார்.

விசா ரத்து, பயணத்தடை போன்ற அறிவிப்புகள் பற்றி கொலம்பியா அதிபர் கூறுகையில், 'நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல' என்றும் பதிலடி கொடுத்துள்ளார். கொலம்பியா திருப்பி அனுப்பும் விமானங்களை ஏற்க மறுத்ததற்கு பதிலடியாக, அமெரிக்க தூதரகம் விசா சேவையை நிறுத்தியது.

இதையடுத்து, அமெரிக்க அதிபரும், வெளியுறவு அமைச்சரும், கொலம்பியாவுக்கு எதிரான தடைகளை கண்டிப்புடன் அமல் செய்ய உத்தரவிட்டனர். நிலைமை மோசமாவதை கண்டு உஷாரான கொலம்பியா அரசு, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

சட்டவிரோதமாக சென்றவர்களை திருப்பி அழைத்து வரும் விமானங்களை ஏற்பதாக கொலம்பியா அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அந்நாடு மீது விதிக்கப்பட்ட தடைகள், வரி விதிப்பு ஆகியவற்றை ரத்து செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us